ஹதீஸ்கள்
#228
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; (தொழுகையை விட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வரும்) மாதவிடாய் இரத்தமன்று. எனவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி (குளித்து)விட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்மணியிடம்), “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، قال حدثنا ابو معاوية، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت جاءت فاطمة ابنة ابي حبيش الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني امراة استحاض فلا اطهر، افادع الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم " لا، انما ذلك عرق، وليس بحيض، فاذا اقبلت حيضتك فدعي الصلاة، واذا ادبرت فاغسلي عنك الدم ثم صلي ". قال وقال ابي " ثم توضيي لكل صلاة، حتى يجيء ذلك الوقت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #228
- Book Index
- 94
Grades
- -
