ஹதீஸ்கள்
#226
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். “பனூ இஸ்ராயீல் மக்களில் ஒருவரது ஆடையில் சிறுநீர் பட்டுவிட்டால், அவர் அந்தப் பாகத்தைக் கத்தரித்துவிடுவார்” எனக் கூறுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عرعرة، قال حدثنا شعبة، عن منصور، عن ابي وايل، قال كان ابو موسى الاشعري يشدد في البول ويقول ان بني اسراييل كان اذا اصاب ثوب احدهم قرضه. فقال حذيفة ليته امسك، اتى رسول الله صلى الله عليه وسلم سباطة قوم فبال قايما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #226
- Book Index
- 92
Grades
- -
