ஹதீஸ்கள்
#225
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னா லிருந்த ஒரு கூட்டத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து. (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை(த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின்பக்கம் (ஒரு மறைப்பாக) நின்றுகொண்டிருந்தேன். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، قال حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن حذيفة، قال رايتني انا والنبي، صلى الله عليه وسلم نتماشى، فاتى سباطة قوم خلف حايط، فقام كما يقوم احدكم فبال، فانتبذت منه، فاشار الى فجيته، فقمت عند عقبه حتى فرغ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #225
- Book Index
- 91
Grades
- -
