ஹதீஸ்கள்
#218
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறை களைக் கடந்து சென்றார்கள். அப்போது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விரு வரில் ஒருவரோ, சிறுநீரிலிருந்து (தம் உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒன்றை ஊன்றினார்கள். (அது பற்றி) மக்கள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا محمد بن خازم، قال حدثنا الاعمش، عن مجاهد، عن طاوس، عن ابن عباس، قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال " انهما ليعذبان، وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول، واما الاخر فكان يمشي بالنميمة ". ثم اخذ جريدة رطبة، فشقها نصفين، فغرز في كل قبر واحدة. قالوا يا رسول الله، لم فعلت هذا قال " لعله يخفف عنهما ما لم ييبسا ". قال ابن المثنى وحدثنا وكيع قال حدثنا الاعمش قال سمعت مجاهدا مثله " يستتر من بوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #218
- Book Index
- 84
Grades
- -
