ஹதீஸ்கள்
#216
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள -அல்லது மக்காவிலுள்ள- தோட்டங்களில் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது மண்ணறைக்குள் (கப்று) வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இரு மனிதர்களின் (கூக்)குரலைச் செவி யுற்றார்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, “ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச்செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ, தமது சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டுவரச்சொல்லி. அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال حدثنا جرير، عن منصور، عن مجاهد، عن ابن عباس، قال مر النبي صلى الله عليه وسلم بحايط من حيطان المدينة او مكة، فسمع صوت انسانين يعذبان في قبورهما، فقال النبي صلى الله عليه وسلم " يعذبان، وما يعذبان في كبير "، ثم قال " بلى، كان احدهما لا يستتر من بوله، وكان الاخر يمشي بالنميمة ". ثم دعا بجريدة فكسرها كسرتين، فوضع على كل قبر منهما كسرة. فقيل له يا رسول الله لم فعلت هذا قال " لعله ان يخفف عنهما ما لم تيبسا او الى ان ييبسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #216
- Book Index
- 82
Grades
- -
