ஹதீஸ்கள்
#215
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்கு) புறப்பட்டுச் சென்றோம். (கைபருக்கு அருகிலுள்ள) ‘ஸஹ்பா’ எனும் இடத்தை நாங்கள் அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் உணவு கொண்டுவரும்படி கூறினார்கள். (வேறெதுவும் இல்லாததால்) அவர்களிடம் மாவு மட்டும் கொண்டுவரப்பட்டது. நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்; அருந்தினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமல் எங்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #215
- Book Index
- 81
Grades
- -