ஹதீஸ்கள்
#209
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (கைபருக்குச்) சென்றேன். கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பிறகு பயண உணவைக் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைத் தண்ணீரில் நனைக்கும்படி பணித்தார்கள். (அது நனைக்கப்பட்டதும் அதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நாங்களும் உண்டோம். பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அவர்கள் வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும் கொப்புளித்தோம். பிறகு (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #209
- Book Index
- 75
Grades
- -