ஹதீஸ்கள்
#206
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (அங்கத் தூய்மை செய்ய முற்பட்டபோது) அவர்களின் இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன்” என்று கூறிவிட்டு, (ஈரக் கையால்) அவ்விரு காலுறைகளைத் தடவி (மஸ்ஹு செய்ய லா)னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا زكرياء، عن عامر، عن عروة بن المغيرة، عن ابيه، قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر، فاهويت لانزع خفيه فقال " دعهما، فاني ادخلتهما طاهرتين ". فمسح عليهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #206
- Book Index
- 72
Grades
- -
