ஹதீஸ்கள்
#195
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்தபோது, தமது வீடு சமீபத்தில் இருந்தவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்வதற்காக) தம் வீடுகளுக்குச் சென்ற னர். மற்றவர்கள் அங்கேயே (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு (சிறிய) கல்பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப் பாத்திரத்திற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை விரித்துக் கழுவ முடியாதபடி (அதன் வாய்) சிறியதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அதில் அங்கத் தூய்மை செய்தனர். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் (அப்போது) இருந்தீர் கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #195
- Book Index
- 61
Grades
- -