ஹதீஸ்கள்
#145
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இயற்றைக் கடனை நிறைவேற்ற நீ அமரும்போது, கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று மக்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு நாள் எங்கள் (ஹஃப்ஸா) வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற் செயலாக)க் கண்டேன்” என்று கூறு வார்கள்.10 பிறகு என்னிடம், “புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ!” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது” என்றேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தரையுடன் (புட்டத்தை) சேர்த்துக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரை யிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்(து தொழு)பவரைத்தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இவ்வாறு) குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #145
- Book Index
- 11
Grades
- -