ஹதீஸ்கள்
#143
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கி யிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப் போது அவர்களுக்காக நான் (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. அப்போது “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا هاشم بن القاسم، قال حدثنا ورقاء، عن عبيد الله بن ابي يزيد، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم دخل الخلاء، فوضعت له وضوءا قال " من وضع هذا ". فاخبر فقال " اللهم فقهه في الدين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #143
- Book Index
- 9
Grades
- -
