ஹதீஸ்கள்
#140
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது (ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைக் கொண்டு) தமது முகத்தைக் கழுவினார்கள். -அதாவது (ஒரே) ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாயும் கொப்புளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தி னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதை -இவ்வாறு- மற்றொரு கையுடன் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது (ஈரக்கையால்) தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைத் தமது வலக் காலின் மீது சிறுகச் சிறுக ஊற்றி அதைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடக் காலில் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، قال اخبرنا ابو سلمة الخزاعي، منصور بن سلمة قال اخبرنا ابن بلال يعني سليمان عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابن عباس، انه توضا فغسل وجهه، ثم اخذ غرفة من ماء، فمضمض بها واستنشق، ثم اخذ غرفة من ماء، فجعل بها هكذا، اضافها الى يده الاخرى، فغسل بهما وجهه، ثم اخذ غرفة من ماء، فغسل بها يده اليمنى، ثم اخذ غرفة من ماء، فغسل بها يده اليسرى، ثم مسح براسه، ثم اخذ غرفة من ماء فرش على رجله اليمنى حتى غسلها، ثم اخذ غرفة اخرى، فغسل بها رجله يعني اليسرى ثم قال هكذا رايت رسول الله صلى الله عليه وسلم يتوضا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #140
- Book Index
- 6
Grades
- -
