ஹதீஸ்கள்
#136
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
நுஐம் பின் அப்தில்லாஹ் அல் முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பின்னர் “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மையின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் ‘(பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போரே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் யாருக்கு (தம் உறுப்புகளை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.4 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا الليث، عن خالد، عن سعيد بن ابي هلال، عن نعيم المجمر، قال رقيت مع ابي هريرة على ظهر المسجد، فتوضا فقال اني سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان امتي يدعون يوم القيامة غرا محجلين من اثار الوضوء، فمن استطاع منكم ان يطيل غرته فليفعل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #136
- Book Index
- 2
Grades
- -
