ஹதீஸ்கள்
#135
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிறு துடக்கு ஏற்பட்டவர் அங்கத் தூய்மை செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது” எனக் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஹள்ரமவ்த்’ (யமன்) எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறு துடக்கு என்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘சப்தத் துடனோ சப்தமின்றியோ நாற்ற வாயு பிரிவது’ என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #135
- Book Index
- 1
Grades
- -