ஹதீஸ்கள்
#130
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத் தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவ தில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆம்! உறங்கி விழித்ததும் தன்மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமை தான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தால்) எனது முகத்தை மூடிக்கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال اخبرنا ابو معاوية، قال حدثنا هشام، عن ابيه، عن زينب ابنة ام سلمة، عن ام سلمة، قالت جاءت ام سليم الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان الله لا يستحيي من الحق، فهل على المراة من غسل اذا احتلمت قال النبي صلى الله عليه وسلم " اذا رات الماء ". فغطت ام سلمة تعني وجهها وقالت يا رسول الله وتحتلم المراة قال " نعم تربت يمينك فبم يشبهها ولدها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #130
- Book Index
- 72
Grades
- -
