ஹதீஸ்கள்
#129
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக யார் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவர் உறுதியாகச் சொர்க்கம் புகுவார்” என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குக் கூறப்பட்டது. அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்க, “(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்துவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.31 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا معتمر، قال سمعت ابي قال، سمعت انسا، قال ذكر لي ان النبي صلى الله عليه وسلم قال لمعاذ " من لقي الله لا يشرك به شييا دخل الجنة ". قال الا ابشر الناس قال " لا، اني اخاف ان يتكلوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #129
- Book Index
- 71
Grades
- -
