ஹதீஸ்கள்
#126
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் இறையில்லம் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்: ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) இறைமறுப்பிலிருந்து புதிதாக (இஸ்லாத் துக்கு) வந்தவர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால், நான் இறையில்லம் கஅபாவைத் துளைத்து, மக்கள் நுழைவ தற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலுமாக அதற்கு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் எண்ணத்தை) செய்து முடித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن الاسود، قال قال لي ابن الزبير كانت عايشة تسر اليك كثيرا فما حدثتك في الكعبة قلت قالت لي قال النبي صلى الله عليه وسلم " يا عايشة، لولا قومك حديث عهدهم قال ابن الزبير بكفر لنقضت الكعبة فجعلت لها بابين باب يدخل الناس، وباب يخرجون ". ففعله ابن الزبير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #126
- Book Index
- 68
Grades
- -
