ஹதீஸ்கள்
#125
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் வசிப்பிடமில்லாத) ஒரு பாழ்வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த ஒரு பேரீச்ச மட்டையை ஊன்றிக்கொண்டு வந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) “அவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்றார். இன்னொருவர் “அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்துவிடப் போகிறது” என்றார். இறுதியில் அவர்களில் சிலர், இறைவன்மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) கட்டாயம் அவரிடம் கேட்டேவிடுவோம்” என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, “அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான், “நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது” என்று சொல்லிக்கொண்டேன். (வேத அறிவிப் பின்போது ஏற்படும் சிரம நிலை விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது, “(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” (17:85) எனும் இறைவசனத்தைக் கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (சுலைமான் பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘உங்களுக்கு’ சிறிதளவு அறிவே வழங்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக) ‘அவர்களுக்கு’ (‘வமா ஊ(த்)தூ’) என்றுதான் எங்களது ஓதல்முறையில் உள்ளது. அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، قال حدثنا عبد الواحد، قال حدثنا الاعمش، سليمان عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال بينا انا امشي، مع النبي صلى الله عليه وسلم في خرب المدينة، وهو يتوكا على عسيب معه، فمر بنفر من اليهود، فقال بعضهم لبعض سلوه عن الروح. وقال بعضهم لا تسالوه لا يجيء فيه بشىء تكرهونه. فقال بعضهم لنسالنه. فقام رجل منهم فقال يا ابا القاسم، ما الروح فسكت. فقلت انه يوحى اليه. فقمت، فلما انجلى عنه، قال {ويسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا}. قال الاعمش هكذا في قراءتنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #125
- Book Index
- 67
Grades
- -
