ஹதீஸ்கள்
#124
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கல்லெறியும் இடமான) ‘ஜம்ரா’வில் இருந்தபோது, கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிந்துவிடுக” என்றார்கள். மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்ற மில்லை; (இப்போது) குர்பானி கொடுத்து விடுக!” என்றார்கள். (அன்றைய தினம் பிந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “குற்றமில்லை; (விடுபட் டதை) செய்வீராக!” என்றே சொன் னார்கள்.30 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا عبد العزيز بن ابي سلمة، عن الزهري، عن عيسى بن طلحة، عن عبد الله بن عمرو، قال رايت النبي صلى الله عليه وسلم عند الجمرة وهو يسال، فقال رجل يا رسول الله نحرت قبل ان ارمي. قال " ارم ولا حرج ". قال اخر يا رسول الله حلقت قبل ان انحر. قال " انحر ولا حرج ". فما سيل عن شىء قدم ولا اخر الا قال افعل ولا حرج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #124
- Book Index
- 66
Grades
- -
