ஹதீஸ்கள்
#119
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “உமது மேலங்கியை விரிப்பீராக” என்று சொல்ல, உடனே நான் அதை விரித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அள்ளி(க் கொட்டிவிட்டு), “(நெஞ்சோடு) அணைத்துக் கொள்வீராக” என்றார்கள். உடனே நான் அதை (என் நெஞ்சோடு) அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதையும் மறந்ததே இல்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن ابي بكر ابو مصعب، قال حدثنا محمد بن ابراهيم بن دينار، عن ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قلت يا رسول الله، اني اسمع منك حديثا كثيرا انساه. قال " ابسط رداءك " فبسطته. قال فغرف بيديه ثم قال " ضمه " فضممته فما نسيت شييا بعده. حدثنا ابراهيم بن المنذر قال حدثنا ابن ابي فديك بهذا او قال غرف بيده فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #119
- Book Index
- 61
Grades
- -
