ஹதீஸ்கள்
#117
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர் களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷா தொழுவித்துவிட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (தம் குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு) உறங்கினார்கள். பின்னர் எழுந்து “சின்னப் பையன் தூங்கிவிட்டானா?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு, மீண்டும் (தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன். உடனே என்னை தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு, (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். பிறகு அவர்களின் குறட்டை சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பிறகு (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #117
- Book Index
- 59
Grades
- -