ஹதீஸ்கள்
#111
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் - ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம், “(நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களி டம் எழுதப்பட்ட ஏடு ஏதேனும் உள்ளதா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “(குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் வேதத்தையும், (குர்ஆனி லிருந்து) ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, வேறு எதுவும் (எங்களிடம்) இல்லை” என்றார்கள். நான் “இந்த ஏட்டில் என்ன இருக் கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டங்கள்), போர்க் கைதிகளை (எதிரியிட மிருந்து) விடுவித்தல், இறைமறுப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது (என்பவை இதில் உள்ளன)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال اخبرنا وكيع، عن سفيان، عن مطرف، عن الشعبي، عن ابي جحيفة، قال قلت لعلي هل عندكم كتاب قال لا، الا كتاب الله، او فهم اعطيه رجل مسلم، او ما في هذه الصحيفة. قال قلت فما في هذه الصحيفة قال العقل، وفكاك الاسير، ولا يقتل مسلم بكافر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #111
- Book Index
- 53
Grades
- -
