ஹதீஸ்கள்
#110
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக்கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற) எனது குறிப்புப்பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக்கொள்ளாதீர்கள். கனவில் யார் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும், என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، قال حدثنا ابو عوانة، عن ابي حصين، عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " تسموا باسمي ولا تكتنوا بكنيتي، ومن راني في المنام فقد راني، فان الشيطان لا يتمثل في صورتي، ومن كذب على متعمدا فليتبوا مقعده من النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #110
- Book Index
- 52
Grades
- -
