ஹதீஸ்கள்
#107
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(தந்தையே!) உங்களைப் போன்று (நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னவர் இன்னவரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக ஹதீஸ்) அறிவிப்பதைப் போன்று, தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்?” என்று கேட்டேன். அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், “(மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும் பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், ‘என்மீது யார் பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (அதனால்தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை)” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #107
- Book Index
- 49
Grades
- -