ஹதீஸ்கள்
#105
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) “...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனித மிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனித மிக்கவை ஆகும். அறிந்துகொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர் களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லி விடட்டும்!” என்று கூறினார்கள். மேலும், “(மக்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்துவிட்டேனா?” என்று இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அபூபக்ரா (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸை செவியுற்ற அவர்களின் புதல்வர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள், “(‘உங்கள் உடைமைகளும்’ என்பதற்கு அடுத்து) ‘உங்கள் மானங் களும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே (வந்தவர்கள் வராதவர் களுக்குச் சொல்லும் பணி) நடந்தது” என்று (இந்த நபிமொழியை அறிவித்தபின்) கூறுவது வழக்கம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #105
- Book Index
- 47
Grades
- -