ஹதீஸ்கள்
#103
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால், அதை அவர்கள் (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யார் (மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் (குர்ஆனில்) “வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச்சீட்டு வழங்கப் பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:7,8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன்) சமர்ப்பிக் கப்படுவதுதான். ஆனால், துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்துபோவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #103
- Book Index
- 45
Grades
- -