ஹதீஸ்கள்
#101
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(நாங்கள் தங்களை அணுகி விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்க ளிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை நீங்களே ஒதுக்குங்கள்” எனக் கேட்டுக் கொண் டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக்) கட்டளைகளை வலியுறுத்தினார்கள். பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னவற்றில் இதுவும் அடங்கும்: “உங்களில் எந்தப் பெண் (தனது மரணத்திற்கு) முன்பாகத் தன் குழந்தைகளில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி, ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) இரண்டு, குழந்தைகளை இழந்து விட்டாலும்தான்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #101
- Book Index
- 43
Grades
- -