ஹதீஸ்கள்
#99
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. (அதாவது நான் கேட்டேன்.) அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் (ஹதீஸ்)மீது உமக் கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என நான் எண்ணி யிருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார் எனில், உளப்பூர்வமாக தூய எண்ணத்துடன் யார் ‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தான்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #99
- Book Index
- 41
Grades
- -