ஹதீஸ்கள்
#93
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது, (மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்படும் விதத்தில் கேள்விக்குமேல் கேள்வி கேட்டனர். அப்போது) அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார். “ஹுதாஃபாதான் உன் தந்தை” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு “என்னிடம் கேளுங்கள்” என்று அடிக்கடி கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) முழங்கால்களில் மண்டியிட்டு அமர்ந்து, “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #93
- Book Index
- 35
Grades
- -