ஹதீஸ்கள்
#91
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் முடிச்சை’ அல்லது ‘அதன் பையையும் அதன் உறையையும்’ (அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி (மக்களுக்கு) அறிவிப்புச் செய். அதற்குப் பிறகு அதை நீ பயன் படுத்திக்கொள். அதன் உரிமையாளர் வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு” என்றார்கள். “அப்படியானால் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)?” என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக் கென்றால், ‘அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு, “அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர் பையும் அதன் கால் குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்குச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்துகொள்கிறது. எனவே, அதை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும்வரை (அதன் போக்கில்) விட்டுவிடு” என்று கூறினார்கள். “அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது உனக்கு உரியது; அல்லது (உரிமை யாளரோ மற்றவரோ அதைப் பிடித்தால் அது) உம்முடைய அந்தச் சகோதரருக் குரியது. (அவ்வாறு யாருமே அதைப் பிடித்துச் செல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #91
- Book Index
- 33
Grades
- -