ஹதீஸ்கள்
#89
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்துவந்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (வஹீ) உள்ளிட்ட அன்றைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டுவந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அவ்வாறே, அவர் சென்று வரும் போதும் அதைப் போன்றே செய்வார். (ஒரு நாள்) தம்முடைய முறை வந்தபோது, என் அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி னார். “அவர் (உமர்) அங்கே இருக்கி றாரா?” என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி வெளியே வந்தேன். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) “ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டிருக்கிறது” என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுதுகொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “எனக்குத் தெரியவில்லை” என்றார். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “நீங்கள் உங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று நின்றுகொண்டே கேட்டேன். நபியவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உடனே நான் ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #89
- Book Index
- 31
Grades
- -