ஹதீஸ்கள்
#88
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண் டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து “உக்பாவே! உங்களுக்கும் நீங்கள் மணந்துகொண்டுள்ள பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர் கள் ஆவீர்கள்)” என்று கூறினார். நான், “நீங்கள் எனக்குப் பாலூட்டியது எனக்குத் தெரியாது; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவுமில்லை” என்று கூறினேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவி லிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இவ்வாறு) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைவிட்டுப் பிரிந்து விட்டேன். அவளும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #88
- Book Index
- 30
Grades
- -