ஹதீஸ்கள்
#87
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக் கும் இடையே நான் (பாரசீக மொழியில்) மொழி பெயர்க்கக்கூடியவனாக இருந் தேன். (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ‘இம் மக்கள் யார்?’ அல்லது ‘இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தார்” என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் (தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்ற நிலையில்) வருகை புரிந்துள்ள ‘சமுதாயமே’ அல்லது ‘தூதுக்குழுவே’ வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அத்தூதுக் குழுவினர், “நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (எதிரிகளான) ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர் நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. எனவே, தெளிவான ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்; நான்கு விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். 1. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது. (இவையன்றி,) போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை (அல்லாஹ்வுக்காக) நீங்கள் வழங்க வேண்டும்” என்று கூறினார்கள். (மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்து, “இவற்றை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போருக்கு அறிவித்துவிடுங்கள்” என்றும் சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் சிலவேளை குறிப்பிட்டுள்ளார்கள்.22 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن ابي جمرة، قال كنت اترجم بين ابن عباس وبين الناس فقال ان وفد عبد القيس اتوا النبي صلى الله عليه وسلم فقال " من الوفد او من القوم ". قالوا ربيعة. فقال " مرحبا بالقوم او بالوفد غير خزايا ولا ندامى ". قالوا انا ناتيك من شقة بعيدة، وبيننا وبينك هذا الحى من كفار مضر، ولا نستطيع ان ناتيك الا في شهر حرام فمرنا بامر نخبر به من وراءنا، ندخل به الجنة. فامرهم باربع، ونهاهم عن اربع امرهم بالايمان بالله عز وجل وحده. قال " هل تدرون ما الايمان بالله وحده ". قالوا الله ورسوله اعلم. قال " شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، وصوم رمضان، وتعطوا الخمس من المغنم ". ونهاهم عن الدباء والحنتم والمزفت. قال شعبة ربما قال النقير، وربما قال المقير. قال " احفظوه واخبروه من وراءكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #87
- Book Index
- 29
Grades
- -
