ஹதீஸ்கள்
#83
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ‘மினா’வில் தம்மிடம் மக்கள் கேள்வி கேட்பதற்காக (ஒட்டகத்தின் மீது அமர்ந்து) இருந்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்பே என் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது குர்பானி கொடுத்துக்கொள்வீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!” என்றார்கள். (அன்றைய தினம் பின்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் முன்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் பின்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் “குற்றமில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்” என்றே சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #83
- Book Index
- 25
Grades
- -