ஹதீஸ்கள்
#72
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் மதீனாவரை சென்றேன். (அப்பய ணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை; ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:) (ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்ச மரக் குருத்தொன்று கொண்டுவரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “மரங்களில் ஒரு வகை மரம் உள்ளது; அது முஸ்லிமுக்கு உதாரணமாகும் (அது என்ன மரம்?)” என்று கேட்டார்கள். “அது பேரீச்ச மரம்தான்” என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்துவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள்.11 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال قال لي ابن ابي نجيح عن مجاهد، قال صحبت ابن عمر الى المدينة فلم اسمعه يحدث عن رسول الله صلى الله عليه وسلم الا حديثا واحدا، قال كنا عند النبي صلى الله عليه وسلم فاتي بجمار فقال " ان من الشجر شجرة مثلها كمثل المسلم ". فاردت ان اقول هي النخلة، فاذا انا اصغر القوم فسكت، قال النبي صلى الله عليه وسلم " هي النخلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #72
- Book Index
- 14
Grades
- -
