ஹதீஸ்கள்
#70
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறிவந் தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “உங்களைச் சலிப்படை யச் செய்துவிடுவேனோ என்று நான் அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நாங்கள் சலிப்படை வதை அஞ்சி (நிலைமை அறிந்து) பக்குவ மாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறிவந்ததைப் போன்றே, உங்களுக்கும் பக்குமாக நான் அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #70
- Book Index
- 12
Grades
- -