ஹதீஸ்கள்
#64
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு) தாம் எழுதிய கடிதத்தை ஒரு மனிதர் மூலம் அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அம் மனிதர் பஹ்ரைன் ஆளுநரிடம் ஒப்படைத்தார்.) அவர் அதை கிஸ்ரா (குஸ்ரூ) இடம் ஒப்படைத்தார். அதைக் கிஸ்ரா படித்ததும் (கோபப்பட்டு) (துண்டு துண்டாகக்) கிழித்துப் போட்டுவிட்டான். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “(இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக் கெதிராகப் பிரார்தித்தார்கள்” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #64
- Book Index
- 6
Grades
- -