ஹதீஸ்கள்
#61
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங்கள் (ஹத்திஸூனீ)?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங் களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால், (மூத்தவர் கள் அமைதியாய் இருக்கும் அந்த அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்டுக்கொண்டு (மௌனமாக) இருந்துவிட்டேன். பின்னர் மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் (ஹத் திஸ்னா), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பேரீச்ச மரம்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #61
- Book Index
- 3
Grades
- -