ஹதீஸ்கள்
#31
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (முஸ்லிம்களிடையே நடந்த ‘ஜமல்’ போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவி செய்வ தற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து “எங்கே செல்கிறீர்?” எனக் கேட்டார்கள். நான் “இந்த மனிதருக்கு உதவி செய்யப்போகிறேன்” என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் “நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களை ஏந்தி சண்டையிட்டுக்கொண்டால், அதில் கொன்றவரும் கொல்லப்பட்டவரும் நரகத்திற்குத் தான் செல்வார்கள்’ என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் ‘அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #31
- Book Index
- 24
Grades
- -