ஹதீஸ்கள்
#20
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லவற்றை(ச் செய்யுமாறு) மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே (செய்யுமாறு) கட்டளை யிடுவார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். (ஆனால்,) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று (நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்)” என்று கூறி னார்கள். (இதைக் கேட்ட) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது. பிறகு “உங்கள் அனைவரைவிடவும் நான் (அல்லாஹ்வை) நன்கு அஞ்சி நடப்பவ னும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال اخبرنا عبدة، عن هشام، عن ابيه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا امرهم امرهم من الاعمال بما يطيقون قالوا انا لسنا كهييتك يا رسول الله، ان الله قد غفر لك ما تقدم من ذنبك وما تاخر. فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول " ان اتقاكم واعلمكم بالله انا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #20
- Book Index
- 13
Grades
- -
