ஹதீஸ்கள்
#18
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
பத்ர் போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த ‘அகபா’ உடன்பாட்டில் கலந்துகொண்ட (பன்னிரண்டு) தலைவர் களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் இருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தை களைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக் கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள். உங்களில் யார் (இவற்றையெல்லாம்) நிறைவேற்றுகிறாரோ, அவருக்குப் பிரதி பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப் பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகத்தில்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள். உடனே நாங்கள் அதன்படி நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #18
- Book Index
- 11
Grades
- -