Loading...

Loading...
நூல்கள்
௨௭௩ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் அல்லாத (கைத்தடி போன்ற) ஒன்றை நோக்கி (திறந்த வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையி-ருந்து) இறங்கி, அதை மேய விட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس رضى الله عنهما انه قال اقبلت راكبا على حمار اتان وانا يوميذ قد ناهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى الى غير جدار، فمررت بين يدى بعض الصف، فنزلت وارسلت الاتان ترتع ودخلت في الصف، فلم ينكر ذلك على احد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அவர்களை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவாசிகளைத் தவிர வேறு யாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان عايشة، قالت اعتم النبي صلى الله عليه وسلم. وقال عياش حدثنا عبد الاعلى حدثنا معمر عن الزهري عن عروة عن عايشة رضى الله عنها قالت اعتم رسول الله صلى الله عليه وسلم في العشاء حتى ناداه عمر قد نام النساء والصبيان. فخرج رسول الله صلى الله عليه وسلم فقال " انه ليس احد من اهل الارض يصلي هذه الصلاة غيركم ". ولم يكن احد يوميذ يصلي غير اهل المدينة
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாட்களில் பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச் சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் இருந்திருக்க முடியாது. (பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களின் வீட்டருகே உள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். மேலும், (ஏழை எளியோருக்காக) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். உடனே அப்பெண்கள் தங்களின் ஆபரணங்களை நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்கள் (ஏந்தியிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் சென்றனர். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا سفيان، حدثني عبد الرحمن بن عابس، سمعت ابن عباس رضى الله عنهما قال له رجل شهدت الخروج مع رسول الله صلى الله عليه وسلم قال نعم، ولولا مكاني منه ما شهدته يعني من صغره اتى العلم الذي عند دار كثير بن الصلت، ثم خطب ثم اتى النساء فوعظهن وذكرهن وامرهن ان يتصدقن فجعلت المراة تهوي بيدها الى حلقها تلقي في ثوب بلال، ثم اتى هو وبلال البيت
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்பட வில்லை. இஷா தொழுகையை செம்மேகம் மறைந்ததி-ருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவதுவரை மக்கள் தொழுதுவந்தனர். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، عن عايشة رضى الله عنها قالت اعتم رسول الله صلى الله عليه وسلم بالعتمة حتى ناداه عمر نام النساء والصبيان. فخرج النبي صلى الله عليه وسلم فقال " ما ينتظرها احد غيركم من اهل الارض ". ولا يصلى يوميذ الا بالمدينة، وكانوا يصلون العتمة فيما بين ان يغيب الشفق الى ثلث الليل الاول
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி வழங் குங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن حنظلة، عن سالم بن عبد الله، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " اذا استاذنكم نساوكم بالليل الى المسجد فاذنوا لهن ". تابعه شعبة عن الاعمش عن مجاهد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ‘சலாம்’ கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர் களுடன்) தொழுகையில் கலந்துகொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள் அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عثمان بن عمر، اخبرنا يونس، عن الزهري، قال حدثتني هند بنت الحارث، ان ام سلمة، زوج النبي صلى الله عليه وسلم اخبرتها ان النساء في عهد رسول الله صلى الله عليه وسلم كن اذا سلمن من المكتوبة قمن، وثبت رسول الله صلى الله عليه وسلم ومن صلى من الرجال ما شاء الله، فاذا قام رسول الله صلى الله عليه وسلم قام الرجال
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவிப்பார்கள். (தொழுகை முடிந்ததும்) பெண்கள் தங்கள் ஆடைகளால் (உடல் முழுவதையும்) போர்த்திக்கொண்டு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، ح وحدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن يحيى بن سعيد، عن عمرة بنت عبد الرحمن، عن عايشة، قالت ان كان رسول الله صلى الله عليه وسلم ليصلي الصبح، فينصرف النساء متلفعات بمروطهن، ما يعرفن من الغلس
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்பேன். (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும்) அந்தக் குழந்தையின் தாய்க்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன். இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مسكين، قال حدثنا بشر، اخبرنا الاوزاعي، حدثني يحيى بن ابي كثير، عن عبد الله بن ابي قتادة الانصاري، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني لاقوم الى الصلاة وانا اريد ان اطول فيها، فاسمع بكاء الصبي، فاتجوز في صلاتي كراهية ان اشق على امه
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “பெண்கள் (இன்று) உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப் போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வரக்கூடாது எனத்) தடுத்திருப்பார்கள்” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், “பனூ இஸ்ராயீல் பெண்கள் (பள்ளிவாசலுக்கு வரக் கூடாதென) தடுக்கப்பட்டிருந்தனரா?” என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.81 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن يحيى بن سعيد، عن عمرة، عن عايشة رضى الله عنها قالت لو ادرك رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن كما منعت نساء بني اسراييل. قلت لعمرة او منعن قالت نعم
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்த தும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார் கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்தி லேயே வீற்றிருப்பார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்குமுன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற்காகத்தான்” என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன். அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، قال حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن هند بنت الحارث، عن ام سلمة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا سلم قام النساء حين يقضي تسليمه، ويمكث هو في مقامه يسيرا قبل ان يقوم. قال نرى والله اعلم ان ذلك كان لكى ينصرف النساء قبل ان يدركهن احد من الرجال
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا ابن عيينة، عن اسحاق، عن انس رضى الله عنه قال صلى النبي صلى الله عليه وسلم في بيت ام سليم، فقمت ويتيم خلفه، وام سليم خلفنا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டு இருக்கும்போதே சுப்ஹு தொழு கையைத் தொழுவிப்பார்கள். இறைநம்பிக் கையுள்ள பெண்கள் (தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட் டின் காரணமாக ‘அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்’ அல்லது ‘அவர் களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள மாட்டார்கள்’. இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن موسى، حدثنا سعيد بن منصور، حدثنا فليح، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي الصبح بغلس فينصرفن نساء المومنين، لا يعرفن من الغلس، او لا يعرف بعضهن بعضا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக் குச் செல்ல) அனுமதி கேட்டால், அவர் களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، عن معمر، عن الزهري، عن سالم بن عبد الله، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم. " اذا استاذنت امراة احدكم فلا يمنعها
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழுதார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا ابن عيينة، عن اسحاق، عن انس، قال صلى النبي صلى الله عليه وسلم في بيت ام سليم، فقمت ويتيم خلفه، وام سليم خلفنا
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றி ருப்பார்கள். “அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந் த)து, ஆண்கள் பெண்களை நெருங்கு வதற்குமுன் பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான்” என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன். அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن هند بنت الحارث، عن ام سلمة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا سلم قام النساء حين يقضي تسليمه، وهو يمكث في مقامه يسيرا قبل ان يقوم. قالت نرى والله اعلم ان ذلك كان لكى ينصرف النساء قبل ان يدركهن الرجال